Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மோடியின் வெற்றி வாய்ப்பை முன்பே கணித்த பரமானந்த பாபாஜி

மே 23, 2019 09:57

திருச்சி: திருச்சி அகிலண்டேஸ்வரி சித்தர் பீடத்தின் ஸ்ரீ பரமானந்த பாபாஜியிடம் தேர்தல் நேரத்தில் ஒரு நேர்காணல் நடத்தப்பட்டது. அப்போது மீண்டும் நரேந்திர மோடி ஆட்சி அமைப்பாரா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பரமானந்த பாபாஜி, மீண்டும் மோடியின் ஆட்சிதான் இந்தியாவில் நடக்கும். அதுவும் அதிகபடியான தொகுதிகளில், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றிப் பெற்று, மோடி ஆட்சியமைப்பார் என்று கூறினார். அவர் கூறியது போல் தற்போது அதிகபடியான தொகுதிகளில் பிஜேபி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இன்று பரமானந்த பாபாஜி கூறும்போது, நரேந்திரமோடியின் ஆட்சி மிகச்சிறந்த ஆட்சி. அதற்கு கிடைத்த வெற்றிதான் இது. தமிழகத்தை பொறுத்தவரை திராவிட கொள்கைகள் தலைதூக்கி நிற்கிறது. திராவிடக் கொள்கைகளை பின்பற்றுபவர்களின் வீண் பிரச்சாரங்களை மக்கள் நம்பியதால்தான்  தமிழகத்தில் பாஜக வெற்றியை நழுவ விட காரணமாகிவிட்டது. பாஜக மக்களுக்காக கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் சிறப்பானது. ஆனால் அதை சரியாக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

வரக்கூடிய மோடியின் 5 ஆண்டுகால ஆட்சி என்பது கடந்த ஆட்சியைவிட இன்னும் சிறப்பாக பொற்கால ஆட்சியாக மாறி வரலாற்றில் இடம்பெறக்கூடியதாக அமையும் என்று கூறினார் பரமானந்த பாபாஜி. 

தலைப்புச்செய்திகள்